ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசுகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கெளதம் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்து வந்திருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தன் மகனுக்காக 120-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட கேப்டன் குடும்பத்தினர், இயக்குனர் நவீன் கதையை ஓகே பண்ணியுள்ளனர். சகாப்தம் என படதிற்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படபூஜை, கேப்டனின் இல்லத்திலேயே வெகுவிமரிசையாக நடந்தது. மேலும் சண்முக பாண்டியனை அன்று படபூஜையில் ஏராளமான திரையுலகினரும் பங்கேற்று வாழ்த்தினர்.
இப்படத்தின் கதை ஒரு புதுமுகத்துக்கான, குடும்பம் , காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாம். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் இன்னும் ஹீரோயின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. காரைக்குடியில் 50 நாட்கள், மலேசியாவில் 50 நாட்கள் என படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது பார்லிமென்ட் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேலையில் இதுதொடர்பாக பிசியாக இருக்கும் கேப்டன், நேரம் கிடைக்கும்போது தன் மகன்பட டிஸ்கசனிலும் அடிக்கடி கலந்து கொண்டு ஆலோசனை தருகிறாராம். படத்தின் கிளைமாக்ஸ் பக்காவாக பேசப்படுமாம். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே 85 கிலோவாக இருந்த தனது எடையை 65 கிலோவாக குறைத்து, 6.4 அடியில் அனைவரையும் வியப்பாக அண்ணாந்து பார்க்க வைக்கிறாராம் சண்முகபாண்டியன். கேப்டனின் வாரிசாச்சே சும்மாவா...!!