ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கேயார் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த தாணு, தேர்தலை நடத்திய நீதிபதிகள் கேயார் அணிக்கு சாதகமாக செயல்பட்டார்கள், விதிகளை மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள் எனவே தேர்தல் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கொள்கை முடிவு எடுக்க இடைக்கால தடைவிதித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் தாணு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், உறுப்பினர்கள் ஞானவேல் ராஜா மற்றும் அம்மா கிரியேசன்ஸ் சிவா ஆகியோர் கூறுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னை தீர்ந்து விட்டது. இனி சங்கம் புதுத்தெம்போடு செயல்படும் என்றனர்.