மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதா, மெட்டி, நண்டு, அழகிய கண்ணே போன்ற பல படைப்புகளை தந்தவர். கடைசியாக 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தை இயக்கினார். இந்திய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப் படம் கிடப்பில் கிடந்து ரிலீசானது. இதனால் வெறுத்துப்போன மகேந்திரன் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாது: புதுமைப்பித்தனின் சிறுகதையை தழுவிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். நடுத்துர வர்க்க குடும்பம் ஒன்று சந்திக்கும் முக்கிய பிரச்னை ஒன்றை மையமாக கொண்ட கதை. கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கிறது. சிறிய பட்ஜெட்டில் ஒரு மாதத்திற்குள் படத்தை எடுத்து முடிக்கிறேன். புதுமுகங்கள்தான் நடிக்கிறார்கள். எனக்காக சில முக்கிய நடிர்கள் ஒரு சில காட்சிகளில் நடித்துக் கொடுக்க இருக்கிறார்கள். வழக்கம்போல இளையராஜாதான் இசை. அவர் இல்லாமல் என்னால் படம் பண்ண முடியாது. இந்த மாத இறுதிக்குள் பாடலை முடித்து தந்துவிடுவார். அதை எடுத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்புகிறேன் என்கிறார் மகேந்திரன்.