மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்று வாலு, இன்னொன்று வேட்டை மன்னன். இந்த படங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் சிம்பு, பின்னர் அப்படியே போட்டு விட்டு வேறு படங்களில் நடிக்கச்சென்று விடுவார். இருப்பினும் அந்த படங்கள் இன்னமும் முடிவடையாத நிலையில, தற்போது பாண்டிராஜ், கெளதம்மேனன் இயக்கும் படங்களிலும் பிசியாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது வாலு படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கும் சிம்பு, அதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். அதனால், தனது காட்பாதரின் படத்துக்கு எப்போதுமே முதலிடம் கொடுக்கும் சந்தானமும், படத்தின் நாயகியான ஹன்சிகாவும் சிம்பு கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்று திட்டமிட்ட சிம்பு, படத்தில் ஏதாவது ஒரு வகையில் அஜீத், விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டவர், ஒரு காட்சியில் தான் அஜீத் மாஸ்கையும், சந்தானத்தை விஜய் மாஸ்கையும் அணிந்து செல்வது போன்று படமாக்கியிருக்கிறார். இந்த காட்சி படத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் படம் திரைக்கு வரும்போது பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.