ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்களுள் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர். சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக ஒரு பெரும் ரவுண்டே வந்தவர். ஆனபோதும், இன்றுவரை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சென்றும் நாடகங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவரது நாடகங்களுக்கு இன்றளவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், இருக்கு ஆனா இல்ல என்ற த்ரில்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சரவணன் என்ற புதுமுக இயககுனர் இயக்கியுள்ள அந்த படத்தில் விவாந்த், எடன், மனீஷா ஆகிய புதியவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார்.
அப்போது அவர் பேசுகையில், சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடியில் தனி முத்திரை பதித்து வந்தேன். ஆனால், யுத்தம் செய் படத்திற்கு பிறகு கேரக்டர் நடிகராகி விட்டேன். காரணம், இப்போதுள்ள காமெடியெல்லாம் எனக்கு பண்ண தெரியாது. அதனால் மாறுபட்ட வேடங்கள் பக்கம் திரும்பியிருக்கிறேன். அந்தவகையில், இந்த இருக்கு ஆனா இல்ல படத்தில் ஒரு சயின்டிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். பேய் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லும் ஒரு புதுமாதிரியான த்ரில்லர் படம். பேய் இருக்கு ஆனா இல்ல. அது எப்படி? என்பதை கூறும் புதுமையான படம் இது.
மேலும், இந்த படத்தை தயாரித்திருக்கும் 4 பேரும் குவைத் நாட்டைச்சேர்ந்த தமிழர்கள். நான் அங்கு நாடகங்கள் நடத்த சென்றபோது பரிட்சயமானதால், என்னை இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதோடு, தமிழ் மீது அதிக பற்று கொண்டவர்கள். தமிழை அதிகமாக நேசிப்பவர்கள். அதனாலேயே அவர்களை எனக்கு அதிகமாக பிடிக்கும். அதனால் தமிழ்நாட்டை நம்பி வந்திருக்கும் அவர்களது படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொண்டே இந்த படத்தில் நடித்தேன். என்னைதவிர அனைவரும் புதுமுகங்களே என்றாலும், சரக்கு உள்ள படம் இது. 60 பேர்களிடம் கதையே கேட்டு கடைசியாக இந்த கதையை ஓ.கே செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு கதையை சல்லடை போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆக, இந்த படம் தமிழக ரசிகர்களுக்கும் புதுமையான அனுபவமாக இருக்கும் என்று பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், இந்த படத்திற்காக நானும் விக் வைத்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கும் இந்த படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்றார்.