ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா முதலில் தயாரானது. அதன்பிறகுதான் தலைப்பை கோலிசோடாவாக மாற்றினார். மேலும், பசங்க படத்தில் நடித்த அதே பசங்களையே வைத்து இயக்கியதால், பெரிய செலவு இல்லாமல் வெறும் 30 லட்சத்தில்தான் அந்த படத்தை தானே தயாரித்து இயக்கினார்.
ஆனால், பின்னர் படத்தை முடித்து அவர் விற்பனைக்கு கொண்டு வந்தபோது, படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால், முதலில் சேனலுக்கு படத்தை விற்று விட்டு, பின்னர் தானே ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தவர், ஒரு பெரிய சேனலிடம் கோலிசோடாவை விலை பேசினாராம். ஆனால், இவர் முப்பது லட்சம் செலவு செய்துள்ளேன் கூட பத்து லட்சம் சேர்த்துக் கொடுத்து விட்டு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டபோது அவர்கள் 40 லட்சமெல்லாம் தர முடியாது என்று அடித்து சொல்லி விட்டார்களாம்.
அதன்பிறகுதான் கோலிசோடாவை பார்த்த லிங்குசாமி தானே ரிலீஸ் செய்ய முன்வந்திருக்கிறார். ஆனால், இப்போது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், அப்படத்தின் சேனல் உரிமையை கேட்டு, முன்பு வாங்க மறுத்த நிறுவனமே விஜய் மில்டனை அணுகியதாம். அதற்கு, அப்போ, 40 லட்சம் கேட்டேன். ஆனா இப்போ 3 கோடி. இதுதான பைனல் ரேட். முடிஞ்சா வாங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க என்று சொல்லியடித்து விட்டாராம் விஜய்மில்டன். இதனால், 40 லட்சத்துக்கு வாங்க மறுத்து, இப்போ 3 கோடியை கொடுக்க வேண்டியதாய் உள்ளதே என்று புலம்பிக்கொண்டு நிற்கிறது அந்த பிரபல சேனல்.