ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்தால் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று ஹீரோக்கள் நினைக்கிறார்கள். அதற்கு அடையாளமாக விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நடிகர்களை சொல்லலாம். அவர் படத்தில் நடித்த பிறகுதான் இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்கள் ஆனார்கள் என்பதே உண்மை.
அதேசமயம் பாலாவின் படங்களில் நடித்த ஒரு கதாநாயகிகூட சினிமாவில் ஜொலிக்கவில்லை. சேது படத்தில் அறிமுகமான அபிதா அதன்பிறகு இரண்டொரு படங்களில நடித்தவர் பின்னர் சின்னத்திரைக்கு சென்று விட்டார். அதேபோல், பிதாமகனில் நடித்த சங்கீதா-லைலா ஆகிய இருவருக்கும் அதன்பிறகு படம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.
அதேபோல், நான் கடவுளில் நடித்த பூஜாவுக்கும் மார்க்கெட் சரிந்தது. அதையடுத்து, அவன் இவனில் ஜனனி அய்யர், மது ஷாலினி ஆகிய இருவரும் நடித்தனர். இவர்களில் மது ஷாலினியை அதன்பிறகு காணவில்லை. ஜனனி அய்யர் மட்டும் கஷ்டப்பட்டு தாக்குப்பிடித்து வருகிறார். அதேபோல், பரதேசியில் நடித்த வேதிகாவுக்கும் பெரிய அளவில் எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை.
இதனால் தற்போது பாலா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க, மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளை தொடர்பு கொண்டபோது யாருமே சிக்கவில்லையாம். ஹீரோக்களுக்கு செண்டிமென்டாக ஒர்க்அவுட்டாகும் பாலா, எங்களுக்கு ஒர்க்அவுட ஆவதில்லையே என்று எஸ்கேப்பாகி விட்டார்களாம். அதனால்தான், படமே இல்லாமல் வீட்டு மோட்டு வளையத்தைப்பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரேயாவை தூசி தட்டி கொண்டு வந்துள்ளார்களாம். பாலாவின் மீது விழுந்துள்ள இந்த செண்டிமென்டை ஸ்ரேயா மாற்றியமைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...