ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜில்லா படத்துக்கு பிறகு விஜய் அடுத்து நடிக்கப்போகும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் செய்கிறார். சமந்தா ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டர். லால்குடி இளையராஜா ஆர்ட் டைரக்டர், அனல் அரசு சண்டை இயக்குனர். லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
இதன் துவக்கவிழா நேற்று (பிப்ரவரி 3) காலை 11 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது. கோல்கட்டா காளிகாட் கோவிலில் நடந்த பூஜையில் நெருங்கிய நண்பர்களும், பட யூனிட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தப் படம் துப்பாக்கி-2 என்று கூறப்படுகிறது. சிலீப்பர் செல் வில்லன்கள் அடுத்து கோல்கட்டாவை தாக்க திட்டமிடுவது போலவும் அதை விஜய் டீம் தடுப்பது போலவும் கதை என்று கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் புதிய கதை. விஜய் ராணுவ அதிகாரி என்பது மட்டும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். முழு படப்பிடிப்பும் கோல்கட்டாவிலேயே நடக்கிறது. தற்போது அஞ்சான் ஷூட்டிங்கில் இருக்கும் சமந்தாவும், துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடேவில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாசும் திரும்பிய பிறகு ஏப்ரல் மாதத்திலிருந்து இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. அதுவரை விஜய் வெயிட்டிங்.