ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பு போன்று படங்கள் இல்லாததால் தற்போது கடை திறப்பு விழாக்கள், சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பொழுதை கழித்து வருகிறார் நமீதா. சென்னை மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகள் என்றாலும் பறந்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது சினேகாவும் அதே ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.
விஜயசேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ள சினேகா, அடுத்து பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்து வரும் உன் சமையல் அறையில் என்ற படத்தில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவி வாழ்க்கையை அந்நியோன்யத்தை அறிந்து கொண்ட அவர், இந்த படத்திலும் செயற்கைத்தனம் இல்லாமல் இயற்கையான மனைவி போலவே நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே சினேகா கர்ப்பமாகியிருப்பதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்னும் சில அண்டுகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில்லை என்றும் தெரிவித்த சினேகா, தான் எதிர்பார்த்தபடி புதிய படங்கள் வராததால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்த போரடித்துப்போயிருக்கிறாராம். அதனால், இப்போது கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.
அதோடு, சமீபத்தில் நாகர்கோயிலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்டுள்ளார் சினேகா. அப்போது மேடையில் தோன்றியவர், பெண் கல்வியின் அவசியத்தை பற்றி விரிவாக பேசினாராம். குறிப்பாக, பெண்கள் தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். ஆண்களுக்கு நிகராக எங்களாலும் சாதிக்க முடியம் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும். நம்மால் முடியுமா என்று பின்வாங்கி நிற்ககூடாது. அதனால் எதிலும், எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள் என்று பேசியுள்ளார். சினேகாவின் இந்த பேச்சுக்கு மாணவிகள் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்ததாம்.