ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் என்ட்ரியாகும் நடிகைகள் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினால்தான் முன்னணி இடத்துக்கு செல்ல முடியும். கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்க முடியும். அதனால்தான், அந்த மாஸ் இறங்கி விடக்கூடாது என்று முன்னணி நடிகைகள் கவனமாக இருப்பார்கள். ஆனால், சமீபகாலமாக ஹன்சிகா அப்படி பார்ப்பதில்லை. சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தேயில் நடிப்பவர், அடுத்து ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் என்ற புதுமுகத்துடன் நடிக்கிறார்.
இப்படி நடிப்பதால், மார்க்கெட் இறங்கிப்போகாதா? என்று அவரைக்கேட்டால், படங்களின் வெற்றிதான் மார்க்கெட்டை முடிவு செய்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து படங்கள் தோற்று விட்டால் அப்படங்களின் ஹீரோக்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ கதாநாயகியை ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்ற நிலைதான் உள்ளது.
அதனால்தான், வெற்றியை முன்வைத்தே எனது பயணம் செல்கிறது. அதன்காரணாகத்தான், கதாநாயகனைப்பார்த்து படங்களை ஒத்துக்கொள்வதை நிறுத்தி விட்டு, கதையை முன்வைத்தே படங்களை ஓ.கே செய்து வருகிறேன் என்று சொல்லும் ஹன்சிகா, எல்லா மொழியிலும் இதே பாணியைத்தான் இப்போது கடைபிடிக்கிறாராம்.
இதனால் உங்களது படக்கூலி இறங்கி விடுமே? என்றால், என்னைப்பொறுத்தவரை, இப்போதும் படத்துக்கப்படம் எனது சம்பளம் எகிறிக்கொண்டுதான் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்பதற்காக யாரும் எனது படக்கூலியை குறைக்கவில்லை என்கிறார் ஹன்சிகா.