ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டு நடிகைகளும் சரி, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகளும் சரி, தமிழ் நன்றாக தெரிந்தாலும், சினிமா மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுவதையே ஒரு பேஷனாக நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு இயக்குனர்கள் வட்டாரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து அவர்கள் பேசும்போது, தமிழ்ப்படங்களில் நடிக்கிறீர்கள். தமிழிலும் நன்றாக பேசுகிறீர்கள் பிறகு எதற்காக மேடைக்கு வந்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், சென்னையில் நடந்த பாக்கணும் போல இருக்கு படத்தின் ஆடியோ விழாவில், விழாவுக்கு வந்திருந்த நமீதா, அப்பட நாயகி ஹன்சிபா உள்ளிட்டோர் வேற்று மாநிலங்களைச்சேர்ந்தவர்களாக இருந்தபோதும் தங்களுக்குத் தெரிந்த தமிழிலேயே பேசினர். ஆனால் அவர்களைத் தொடர்ந்து பேசிய வெளுத்துக்கட்டு பட நாயகியான அருந்ததி ஒரு வார்த்தைகூட தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசி விட்டு அமர்ந்தார்.
அதன்பிறகு பேசிய டைரக்டர் சீனுராமசாமி, அருந்ததி ஆங்கிலத்தில் பேசியதை கண்டித்தார். அருந்ததிக்கு நன்றாக தமிழ் தெரியும். ஆனால், அவரோ ஆங்கிலத்தில் பேசுகிறார். இப்படி பேசியதால் ஆங்கிலம் தெரிந்த சிலருக்கு மட்டுமே அது புரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு அவர் என்ன பேசுகிறார் என்பதுபுரிந்திருக்க நியாயமில்லை. அதனால், தமிழ் தெரிந்த அருந்ததி போன்ற நடிகைகள் இனிமேல் மேடைகளில் தமிழிலேயே பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதை அருந்ததியும் ஏற்றுக்கொள்வது போல் அமர்ந்திருந்தார்.