Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெங்களூருவில் ரஜினி: ரசிகர்கள் சூழ்ந்ததால் மந்த்ராலயா பறந்தார்!

31 ஜன, 2014 - 14:24 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி பெங்களூர் செல்வது வழக்கம். மாறுவேடத்தில் செல்லும் அவர் அங்கு தான் படித்த பள்ளி, வாழ்ந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் பெங்களூருவை சுற்றி வருவார். இது அவருக்கு பிடித்தமான ஒன்று. உடல்நலம் குன்றிய பிறகு பெங்களூரு செல்வதை குறைத்துக் கொண்டார். கடைசியாக அவரது அண்ணன் சத்யநாராயணா கட்டிய புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு சென்றவர் உடனேயே திரும்பி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 27ந் தேதி தனக்கு நெருக்கமான சென்னை நண்பர்களுடன் பெங்களூருக்குச் சென்றார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள அண்ணன் சத்யநாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று தங்கினார். அவருடன் அவரது பெங்களூரு நண்பர்களும் இருந்தனர். விடிய விடிய பேச்சும், விளையாட்டுமாக பொழுதை கழித்தார்.

மறுநாள் 28ந் தேதி காலை அண்ணன் சத்யநாராயணா வீட்டுக்குச் சென்றார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக உறவினர்களும், ரஜினியின் நண்பர்களும் சத்யநாராயணா வீட்டில் கூடியிருந்தார்கள். அவர்களை சந்தித்து விட்டு தன் அண்ணனுடன் நீண்ட நேரம் தனிமையில் பேசிவிட்டு கிளம்பினார். அதன் பிறகு கவிபுரம் குட்டஹள்ளி பகுதிக்கு மாறுவேடத்தில் சென்றார். அங்கு அவர் படித்த கன்னட மாதிரி பள்ளியில் நடக்கும் கட்டுமான பணிகளை சுற்றிப் பார்த்தார். ரஜினி கொடுத்த நன்கொடையால் அந்த பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பின்னர் தனது இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோவிலுக்குச் சென்று வணங்கினார்.

வழக்கமாக பெங்களூரு வரும்போது தனது நண்பன் ராஜ்பகதூரை சந்திக்கும் ரஜினி இந்த முறை சந்திக்கவில்லை காரணம் ராஜ்பகதூர் தற்போது ஒன்வே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பில் அவர் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அதேபோல தனது ஆசிரியை பி.என்.சாந்தாம்மாவையும் சந்திக்க முடிவு செய்திருந்தார். அவரையும் சந்திக்கவில்லை. மாறுவேடத்தில் இருந்த ரஜினியை ரசிகர்கள் சிலர் அடையாளம் கண்டு கொண்டதால் அவசர அவரசமாக வீட்டுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரஜினி ரேஸ்கோர்ஸ் வீட்டில் தங்கி இருக்கும் செய்தி பெங்களூர் முழுவதும் பரவ ஆரம்பித்தது. நேற்று (ஜனவரி 30) அதிகாலை முதலே ரஜினி வீட்டு முன் ஆயிரக்கணக்காக ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப 9மணிக்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் வீட்டு காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே புக முயற்சித்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினர்.

இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டதும், வீட்டு பால்கனியில் தோன்றிய ரஜினி தலைக்குமேல் கைகூப்பி ரசிகர்களை வணங்கினார். கையை ஆட்டி அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அமைதியாக கலைந்து செல்லும்படி சைகையாலேயே சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். அப்படி இருந்தும் கூட்டம் கலைவதாக இல்லை. மேலும் மேலும் கூடிக்கொண்டே இருந்தது. இந்த இக்கட்டான நிலை போலீசாரால் ரஜினிக்கு சொல்லப்பட்டது. இதனால் ரஜினி தனது நண்பர்களுடன் தனி காரில் வீட்டின் பின்கேட்டின் வழியாக புறப்பட்டுச் சென்றார். அவர் மந்த்ராலயம் செல்வதாக கூறப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in