ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முதத்தாக போன்ற படங்களை டைரக்ட் செய்தவர் ராசுமதுரவன். கடைசியாக சொகுசு பேருந்து என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்தபோது புற்றுநோயால் இறந்து போனார். அவரது நண்பர்கள் சிலர் இப்போது படத்தை முடித்து இருக்கிறார்கள். ராசுமதுரவன் பான்பராக் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அதனால்தான் புற்றுநோயால் இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சொகுசு பேருந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பல சினிமா பிரமுகர்கள் ராதுமதுரவன் குடும்பத்துக்கு பல வழிகளில் உதவ உத்தரவாதம் அளித்தனர். தயாரிப்பாளர் சங்க பிரமுகர்கள் படம் வெளிவர உதவுவதாக தெரிவித்தனர். இந்த விழாவில் டைரக்டர் அமீர் கொஞ்சம் காரசாரமாகவே பேசினார்.
மனிதனுக்கு, முதுமை, விபத்து, நோய் இந்த மூன்று வழிகளில்தான் மரணம் வரவேண்டும். நோயை நாம் தேர்ந்தெடுக்க கூடாது. ராசு மதுரவன் தன் மரணத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். சினிமாவில் இயக்குனர் என்ற இடத்துக்கு வருவதற்கு வெளியில் லட்சக்கணக்கான பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் டைரக்டராகி ஜெயித்து விட்டால் நான் டைரக்டர் என்ற இறுமாப்பில் திரியும்போதுதான் குடி பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
எத்தனை பெரிய டைரக்டராக இருந்தாலும் அது வெளியில்தான். வீட்டுக்குள் சென்று விட்டால் மனைவிக்கு நல்ல கணவனாக, பிள்ளைக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பெரிய டைரக்டராக இருந்து என்ன பிரயோஜனம். ராசு மதுரவன் மரணத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடியோடு நிறுத்துங்கள் என்றார்.