மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமீபகாலமாக பெரிய விமர்சகராக மாறிக்கொண்டு வருகிறார் சமந்தா. நெகடீவோ, பாஸிடீவோ எதுவாக இருந்தாலும் தனது கருத்துக்களை தைரியமாக டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அப்படி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டரில் கதாநாயகியை தவறாக சித்தரித்ததாக கருத்து வெளியிட்டு, பெரிய சர்ச்சையிலும் சிக்கினார் சமந்தா. இதனால், மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவுக்கு எதிராக பெரிய அளவில் போர்க்கொடி பிடித்தனர். இருப்பினும், தனது கருத்தில் உறுதியாக இருந்த சமந்தாவுக்கு சித்தார்த் உள்பட ஆந்திராவிலுள்ள சில சினிமா ஜாம்பவான்கள் ஆதரவு குரல் கொடுத்ததால் அதன்பிறகு மகேஷ்பாபுவும, அவரது ரசிகர்கள் அடங்கிப்போயினர்.
இருப்பினும், எனது கருத்து சுதந்திரத்தை யாருக்காகவும் விடமாட்டேன் என்று தொடர்ந்து மனதில் பட்டதை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்,
இப்போது விஜய்மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா படத்தைப்பார்த்த சமந்தா, அப்படம் தன்னை வெகுவாக கவர்ந்திருப்பதாக கருத்து கூறியுள்ளார்.
குறிப்பாக, அதில் நடித்த சின்ன பையன்களையும், பள்ளி சிறுமியாக ஏடிஎம் என்ற வேடத்தில் நடித்த பெண்ணையும் ரொம்பவே பாராட்டியிருக்கிறார். சிறுவர்கள் என்றாலும், இயல்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் காமெடி மற்றும் சீரியஸ் நடிப்பு நிஜ சம்பவம் போன்றே இருந்தது. அதனால் நான் ரொம்பவே ரசித்தேன். அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கிறது என்று டுவிட்ஸ் செய்திருக்கிறார் சமந்தா.
சமந்தாவின் இந்த பாஸிடீவான கருத்து கோலிசோடா யூனிட்டுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.