ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் நாசர், விஷால், சந்தானம் மற்றும் சிவகுமார் ஆகியோரை யாரோ மொட்டை கடிதம் மூலம் திட்டியிருப்பதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால், இந்த விசயம் முதலில் நாசரிடம் இருந்து வெளியானதும் தாங்களுக்கும் அதுபோன்ற கடிதம் வந்திருப்பதாக மற்றவர்களும் தெரிவித்துள்ளார்களாம்.
ஆனால் அந்த கடிதத்தை யார், எங்கிருந்து எழுதியிருக்கிறார்கள் என்ற விவரம் ஏதும் இல்லையாம். அதோடு பேனாவை வைத்து எழுதாமல், டைப் செய்து அனுப்பியிருக்கிறார்களாம். அதிலும் கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டியிருக்கிறார்களாம். இதனால், சம்பந்தப்பட்ட அனைவருமே கொதித்துப்போயிருக்கிறார்கள்.
இதையடுத்து தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் நாசர், சென்னை வந்து இந்த கடிதம் சம்பந்தமாக போலீசில் புகார் அளிக்கயிருக்கிறாராம். தங்களைப்பற்றி அசிங்கமான வார்த்தைகளால் கடிதம் அனுப்பியவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்போகிறாராம்.