டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்த சூர்யா கைவிட்ட நேரம், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற கெளதம்மேனனுக்கு கைகொடுத்தார் சிம்பு. அந்த படத்தை தானே தயாரிக்கும் கெளதம், படப்பிடிப்பை தொடங்கி விட்டால் பைனான்ஸ் பிரச்னைகள் எளிதில் கிடைத்து விடும் என்று நினைத்திருந்தாராம். ஆனால் இரண்டு வாரங்கள் கால்சீட் கொடுத்து சிம்பு நடித்து விட்டபோதும் பைனான்ஸ் பிரச்னைகள் கைக்கு வரவில்லையாம். அதனால் அடுத்தபடியாக சிம்பு, வாலு மற்றும் பாண்டிராஜ் இயககும் பட வேலைகளில் இறங்கி விட்டார்.
இந்தநிலையில், பிப்ரவரி 6-ந்தேதி முதல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறவிருப்பதால், இப்போது கெளதம்மேனனின் மொத்த கவனமும் அஜீத் படத்தில் திரும்பியுள்ளதாம். அப்படத்துக்கு பைனான்ஸ் ரெடியாக இருப்பதால், அஜீத் படத்தை இயக்கிக்கொண்டே இடையிடையே சிம்பு நடிக்கும் படத்தை நகர்த்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
ஆனால், கெளதம்மேனனுக்கு பைனான்ஸ் தருவதாக வாக்களித்திருந்தவர்கள், கடைசி நேரத்தில் கைவிரித்ததற்கு, இரண்டு தயாரிப்பாளர்கள், அவர் மீது பண மோசடி செய்து விட்டதாக புகார் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.