சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகை வித்யாபாலனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதுகுறித்து வித்யாபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாவது, பத்மஸ்ரீ விருதை தனது குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு கிடைத்திருக்கும் பத்மஸ்ரீ விருது பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. தேசிய விருது வாங்கிய கையோடு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. நான் வாங்கும் 4வது உயரிய விருது இது. அதனை என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திய என்னையே எனக்கு உருவாக்கி தந்த என் குடும்பத்திற்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் வித்யா பாலன்.