ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியாவில் கர்நாடக சினிமா உலகம் மட்டும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கிறது. சாதாரணமான குடும்ப கதைகள், சின்ன அளவிலான ஆக்ஷன் கதைகள். பிற மொழி படங்களின் ரீமேக் என்ற சிறிய வட்டத்துக்குள்தான் செயல்படும். காரணம் கன்னட சினிமாவின் வியாபார தளம் மிக குறைவு. கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாழும் படித்த மக்கள் கன்னட படத்தைவிட இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழி படங்களையே ஆர்வமாக பார்க்கிறார்கள். கர்நாடக விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் டப்பிங் படங்களை திரையிடுவதையே விரும்புகிறார்கள். இதனால் நேரடி கன்னட படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பெரிய அளவில் ஓடுவதில்லை.
எனவே டப்பிங் படங்களுக்கு அங்கு அதிக கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் வெளியான மூன்று வாரத்திற்கு பிறகே கர்நாடகாவில் வெளியிடப்படுகிறது. இப்போது அதையும் நிறுத்த வேண்டும். டப்பிங் படங்களையே கர்நாடகாவுக்குள் கொண்டு வரக்கூடாது என்ற புதிய கோஷம் எழுந்துள்ளது.
டப்பிங் படங்களுக்கு எதிராக கன்னட நடிகர்கள் இன்று (ஜனவரி 27) போராட்டம் நடத்துகிறார்கள். "இந்த போராட்டத்தின் மூலம் டப்பிங் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார் சிவராஜ்குமார். "டப்பிங் படங்கள் என்னும் நோயை கர்நாடகாவிலிருந்து விரட்டி அடிப்போம். மீறி வந்தால் ரத்த ஆறு ஓடும்" என்று மிரட்டி இருக்கிறார் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்.