ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் வாணி கபூர். அவர் இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி அவரே சொல்கிறார். சென்ற ஆண்டுக்கான சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளேன். சுத்தேசி ரொமான்ஸ் படத்துக்காக இது கிடைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். அடுத்து எனக்கு சிம்ரன் மொளகா பஜ்ஜி என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக அஜீத், விஜய்யுடன் நடிக்க வேண்டும். அதற்காக இப்போதே தனியாக ஆசிரியர் வைத்து தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். அடுத்த படத்திற்குள் தமிழ் கற்று விடுவேன். மூன்றாவது படத்தில் நானே டப்பிங்கும் பேசிவிடுவேன். அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது குழுவினரோடு ஆஹா கல்யாணம் படத்தை பார்த்தேன். சூப்பரா வந்திருக்கு. எனக்கு பிடிச்சது மாதிரியே ஆடியன்சுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். என்கிறார் வாணி கபூர்.