ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ், தாயுமானவன் சீரியல்களிலும், புதுயுகம் தொலைக்காட்சியில் அக்னி பறவை தொடரிலும் நடித்து வருகிறார் மதுலிமா. தற்போது அவர் நடித்து வரும் தொடர்களை முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இலங்கைதான் சொந்த நாடு. 30 வருஷத்துக்கு முன்பே எங்க பேமிலி இங்க செட்டிலாயிடுச்சு. படிக்கும்போதே நடிப்புதான் என் கனவு. மக்கள் தொலைக்காட்சியல் பொன்னியின் செல்வன் தொடரில் நடிக்க செலக்ட் ஆனேன். அந்த தொடர் ஆரம்பிக்காததால அங்கேயே தொகுப்பாளினி ஆயிட்டேன். இப்போ இரண்டு சேனல்ல மூன்று சீரியல் நடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.
இடையில பெரிய இயக்குநர்கள் கிட்டேருந்து சினிமாவில் நடிக்க அழைப்பு வந்துச்சு. தொடர்ந்து சீரியலில் ஷூட்டிங் இருந்ததால் அவுங்க கூப்பிட்ட ஆடிசனுக்குகூட போக முடியல. இப்போ சினிமால நடிக்க ஆசை வந்திருக்கு. கையில் இருக்கும் சீரியல்களை முடிச்சுக் கொடுத்துட்டு சினிமா பக்கம் போகலாமுன்ன இருக்கேன் என்றார் மதுமிலா.