ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் சத்யா. எங்கேயும் எப்போதுமில் அறிமுமாகி, தீயா வேலை செய்யணும் குமார், பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, நெடுஞ்சாலை என தொடர் ஹிட்கள் கொடுத்து வருகிறார். அவர் தெருவில் வாய்ப்புக் கேட்ட ஒருவருக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
முறைப்படி இசை கற்று இசை அமைப்பாளர் பாலபாரதியிடன் உதவியாளராக சேர்ந்தேன். சிற்பி, பரத்வாஜிடமும் பணியாற்றினேன். அதன் பிறகு விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். சின்னத்திரை சீரியல்களுக்கு இசை அமைத்தேன். இயக்குனர் கிருஷ்ணா எனக்கு ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் முதல் வாய்ப்பு கொடுத்தார். பாடல்கள் நன்றாக வந்தது. ஆனால் படம் ரிலீசாகவில்லை என்றாலும் அந்தப் பாடலை கேட்டுத்தான் எங்கேயும் எப்போதும் வாய்ப்பு கிடைச்சுது.
இன்னிக்கு பெயர் சொல்லக்கூடிய இசை அமைப்பாளனா வளர்ந்திருக்கேன்னா ஒவ்வொரு கட்டத்துலேயும் யாரோ ஒருத்தர் என்னை தூக்கி விட்டாங்க. அதனால நானும் முடிஞ்ச அளவுக்கு திறமையாளர்களை தூக்கி விடுறேன். நெடுஞ்சாலை பட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய கவிஞரைத்தான் பாடல்கள் எழுத வைக்க முடிவு பண்ணியிருந்தேன்.
ஒரு நாள் வீட்டு இருக்கிற தெருவுல நடந்திக்கிட்டிருந்தப்போ ஒருத்தர் என்னை வழிமறித்து தான் எழுதிய கவிதைகளை காட்சி சினிமாவில் பாட்டு எழுத ஆர்வமா இருப்பதாக சொன்னார். அந்த கவிதைகள் பிரமாதமாக இருந்தது. உடனே அவரை என் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து ஒரு பாடலின் சூழ்நியை சொல்லி பாட்டு எழுதச் சொன்னேன். பிரமாதமாக எழுதினார். படத்தின் அத்தனை பாடலையும் அவரையே எழுதச் சொல்லிவிட்டேன். இப்போது நெடுஞ்சாலையின் அத்தனை பாட்டும் ஹிட். தெருவில் நான் கண்டெடுத்த அந்த கவிஞர் மணிஅமுதவன். என்றார்.