அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நடிகை நஸ்ரியாவும், மலையாள நடிகர் பஹத் பாசிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதனை இருவரின் பெற்றோரும் முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியாவை காதலித்த பஹத்தும், மம்முட்டி மகன் துல்கர் சல்மானை காதலிப்பதாக கூறப்பட்ட நஸ்ரியாவும் வாழ்க்கையில் இணைய இருப்பது தமிழ், மலையாள சினிமாவில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த திடீர் திருமண ஏற்பாடு எப்படி நடந்தது என்பது பற்றி இயக்குனரும், பஹத்தின் தந்தையுமான பாசில் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நான் சினிமா இயக்குனர் என்பதால் சினிமா நடிகர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நடிகர்களுக்கு எப்போ எப்படி வேண்டுமானாலும் காதல் வரலாம். என் மகனும் ஒரு நடிகன். அவனுக்கு எந்த மாதிரியான பெண்ணை பிடிக்கும் என்று தெரியும். அப்படி ஒரு பெண்ணை நாமே தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் என்ன என்று நினைத்தேன். அப்போது என் மனசுக்குள் வந்தவர் நஸ்ரியா. அவுங்க குடும்பமும் எங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்க தான். நானே நஸ்ரியா வீட்டுல போயி பேசினேன். அவர்களுக்கும் இதில் சம்மதம்.
இரண்டு குடும்பத்துக்கும் சம்மதம் என்றவுடன் நானே பஹத்தையும், நஸ்ரியாவையும் அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ரெண்டு குடும்பமும் சேர்ந்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறோம். இரண்டு பேரும் பழிகிப்பாருங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குங்க அதுக்கு பிறகும் உங்களுக்கு சம்மதம்னா கல்யாண ஏற்பாடுகளை நாங்க பார்க்கிறோம்னு சொன்னேன்.
பத்து நாள் கழிச்சு ரெண்டு பேருமே வந்து "கல்யாணத்தை எப்போ வச்சிக்கப்போறீங்க?"ன்னு கேட்டாங்க. நாங்களும் வேலைய ஆரம்பிச்சிட்டோம். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கு. அதுவரைக்கும் அவுங்க காதலிக்கட்டுமே. என்கிறார் பாசில்.
நஸ்ரியாவும், பஹத்தும் இப்போது 'எல் பார் லவ்' என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். காதலித்து ஈகோவால் பிரிந்த காதலர்களை அவர்களது பெற்றோர்களே சேர்த்து வைக்கிற மாதிரியான கதைதான் 'எல் பார் லவ்'.