ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போதைய இயக்குனர்களில் சமுத்திரகனி ரொம்ப செண்டிமென்டானவர். தனது படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு உடன்பிறப்புகளைப்போலவே பாசம் காட்டுவார். அதனால் அவர் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அவரை அண்ணன் என்றே உரிமையோடு அழைக்கிறார்கள்.
அந்த வகையில், சுப்பிரமணியபுரம் படத்தை சசிகுமார் இயக்கியபோது அதில் வில்லன் வேடத்தில் நடித்து அவருக்கு பரிட்சயமானார்தான் சமுத்திரகனி. அதன்பிறகு நாடோடிகள், போராளிகள் என்று இணைந்து செயல்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கிடையே டைரக்டர், நடிகர் என்பது விலகி அண்ணன் தம்பிகளாகி விட்டனர். இப்போதும் சசிகுமாரை என் தம்பி என்றே குறிப்பிடுகிறார் சமுத்திரகனி.
அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு தம்பியும் சமுத்திரகனிக்கு கிடைத்திருக்கிறார். அவர்தான் நான் ஈ படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நானி. தற்போது சமுத்திரக்கனி இயக்கிவரும் நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பில் நானி தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தபோது, ஒரு காட்சியில் சாக்கடையில் படுத்தபடி நானி நடிக்க வேண்டுமாம். அதுபற்றி சமுத்திரக்கனி சொன்னதும் உடனே சென்று சாக்கடைக்குள் படுத்துக்கொண்டாராம். அதைப்பார்த்த அமலாபால், டைரக்டர்தான் இன்னும் ஆக்சன் சொல்லவில்லையே அதற்குள் ஏன் சாக்கடைக்குள் படுத்து விட்டீர்கள் என்று கேட்டாராம்.
அதற்கு, என் அண்ணன் நான் ரொம்ப நேரம் இதற்குள் படுத்திருந்தால் தாங்கிக்கொள்ள மாட்டார். சீக்கிரமே ஷாட் வைத்து விட்டு என்னை வெளியே தூக்கி விடுவார் பாரேன் என்று சென்னாராம் நானி. அதைக்கேட்ட சமுத்திரக்கனி நெகிழ்ந்து போனாராம். என்னை அண்ணன் என்று சொன்னது மட்டுமில்லாமல், அவர் அதிக நேரம் சாக்கடைக்குள் இருப்பதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதைகூட புரிந்து வைத்திருக்கிறாரே என்று அந்த காட்சியில் நடித்து முடித்ததும் நானியை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாராம் சமுத்திரக்கனி.
அதிலிருந்து நானியும் சமுத்திரக்கனிக்கு ஒரு தம்பியாகி விட்டாராம். ஆக, தமிழில் சசிகுமார், தெலுங்கில் நானி என இரண்டு தம்பிகள் சமுத்திரக்கனிக்கு இருக்கிறார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான். இனிமேல் சமுத்திரக்கனிக்கு என்ன கவலை. எத்தனை ஹீரோக்கள் கைவிட்டாலும் அவரை கைதூக்கி விட இரண்டு தம்பிகள் கைவசம் இருக்கிறார்களே.