Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்! சமுத்திரக்கனிக்கு சினிமாவில் இரண்டு தம்பிகளாம்!!

22 ஜன, 2014 - 12:09 IST
எழுத்தின் அளவு:

தற்போதைய இயக்குனர்களில் சமுத்திரகனி ரொம்ப செண்டிமென்டானவர். தனது படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு உடன்பிறப்புகளைப்போலவே பாசம் காட்டுவார். அதனால் அவர் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அவரை அண்ணன் என்றே உரிமையோடு அழைக்கிறார்கள்.

அந்த வகையில், சுப்பிரமணியபுரம் படத்தை சசிகுமார் இயக்கியபோது அதில் வில்லன் வேடத்தில் நடித்து அவருக்கு பரிட்சயமானார்தான் சமுத்திரகனி. அதன்பிறகு நாடோடிகள், போராளிகள் என்று இணைந்து செயல்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கிடையே டைரக்டர், நடிகர் என்பது விலகி அண்ணன் தம்பிகளாகி விட்டனர். இப்போதும் சசிகுமாரை என் தம்பி என்றே குறிப்பிடுகிறார் சமுத்திரகனி.

அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு தம்பியும் சமுத்திரகனிக்கு கிடைத்திருக்கிறார். அவர்தான் நான் ஈ படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நானி. தற்போது சமுத்திரக்கனி இயக்கிவரும் நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பில் நானி தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்தபோது, ஒரு காட்சியில் சாக்கடையில் படுத்தபடி நானி நடிக்க வேண்டுமாம். அதுபற்றி சமுத்திரக்கனி சொன்னதும் உடனே சென்று சாக்கடைக்குள் படுத்துக்கொண்டாராம். அதைப்பார்த்த அமலாபால், டைரக்டர்தான் இன்னும் ஆக்சன் சொல்லவில்லையே அதற்குள் ஏன் சாக்கடைக்குள் படுத்து விட்டீர்கள் என்று கேட்டாராம்.

அதற்கு, என் அண்ணன் நான் ரொம்ப நேரம் இதற்குள் படுத்திருந்தால் தாங்கிக்கொள்ள மாட்டார். சீக்கிரமே ஷாட் வைத்து விட்டு என்னை வெளியே தூக்கி விடுவார் பாரேன் என்று சென்னாராம் நானி. அதைக்கேட்ட சமுத்திரக்கனி நெகிழ்ந்து போனாராம். என்னை அண்ணன் என்று சொன்னது மட்டுமில்லாமல், அவர் அதிக நேரம் சாக்கடைக்குள் இருப்பதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதைகூட புரிந்து வைத்திருக்கிறாரே என்று அந்த காட்சியில் நடித்து முடித்ததும் நானியை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாராம் சமுத்திரக்கனி.

அதிலிருந்து நானியும் சமுத்திரக்கனிக்கு ஒரு தம்பியாகி விட்டாராம். ஆக, தமிழில் சசிகுமார், தெலுங்கில் நானி என இரண்டு தம்பிகள் சமுத்திரக்கனிக்கு இருக்கிறார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான். இனிமேல் சமுத்திரக்கனிக்கு என்ன கவலை. எத்தனை ஹீரோக்கள் கைவிட்டாலும் அவரை கைதூக்கி விட இரண்டு தம்பிகள் கைவசம் இருக்கிறார்களே.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in