சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு வந்தது.
80களில் கலக்கிய இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் யாரும் அறியாமல் ரகசியமாக ஒன்றாக கூடினார்கள்.
தாங்கள் அனைரும் சூப்பர் ஸ்டார்கள், உலகம் பார்க்க விரும்பும் செலிபிரிட்டிகள் என்பதை மறந்து ஒரு குழந்தையை போல மாறி அவர்கள் சிரித்து பேசி, பாடி, ஆடி மகிழ்ந்தார்கள். அதன் துளிகள் இங்கே...
*ரஜினி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்ரிஷ், அர்ஜுன், மோகன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பிரபு உள்பட 20 நடிகர்கள் கலந்து கொண்டனர். கமலும், மம்முட்டியும் மிஸ்சிங்.
*அம்பிகா, ராதா, நதியா, லிஸி, சுஹாசினி, ராதிகா, குஷ்பு, சுமலதா, சரிதா, ரம்யா கிருஷ்ணன் உள்பட 12 நடிகைகள் கலந்து கொண்டனர்.
*ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரஸ்கோட் வைப்பார்கள். கடந்த ஆண்டு அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்தார்கள். இந்த ஆண்டு ஹவாய் தீவு மக்கள் அணியும் பூக்கள் வரையப்பட்ட பிரிண்டட் உடை அணிந்த வந்தார்கள்.
*80களில் பிரபலமாக இருந்த அனைவரையும் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார் மோகன்லால். அதனை அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார். அவரவர் படங்கள் மீது அவரவர் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்கள்.
*மோகன்லால் ஒரு மணி நேரம் மேஜிக் ஷோ நடத்தி அனைவரையும் மகிழ வைத்தார்.
*சூப்பர் ஸ்டார் ரஜினி தனது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை அதே கம்பீரத்தோடு பேசிக் காட்டி தனக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபித்தார்.
*மினி இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மோகன்லால், ஜெயராம், சுஹாசினி ரமேஷ் அரவிந்த் பாடினார்கள்.
*நடன நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்தவர்கள் ஜோடியாக ஆடினார்கள். ரஜினி மட்டும் "நமக்கு டான்செல்லாம் வராது கண்ணா வேணா பைட்டு வச்சிக்கலாமா?" என்று கேட்டு தூள் கிளப்பினார்.
*நிகழ்ச்சிகளை அனைவருக்கும் நெருக்கமான ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுத்தார். வீடியோவும் எடுக்கப்பட்டது. அதை வாங்க சில சேனல்கள் கோடிக் கணக்கில் பேசி வருகிறதாம். ஆனால் இது எங்கள் பர்சனல் என்று கூறிவிட்டார்களாம்.
*அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் யோகா சொல்லித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி. நமக்கென்று ஒரு பொழுதுபோக்கு கிளப் அமைக்க ஈசியாரில் இடம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஷோபனா, கட்டிடம் கட்டித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.
*அடுத்து ஆண்டு கொண்டாட்டத்தை மும்பையில் நடத்துவது என்றும், அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் அமீர்கான், அனில் கபூரை அழைப்பது என்ற முடிவு செய்து கலைந்தார்கள்.
நிகழ்ச்சியின் கண்கவர் படத் தொகுப்பை காண "மேலும் படங்கள்" கிளிக் செய்யவும்.