சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
வல்லவன் படத்தில் இணைந்து காதல் ஜோடியான சிம்பு-நயன்தாரா உறவில் பின்னர் விரிசல் விழுந்தாலும் மீண்டும் அவர்கள் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இணைந்திருப்பது பரபரப்பாகியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே அவர்களுக்குள் பிரச்னைகள் வந்து கொண்டிருப்பதாகவும், அதனால் சிம்பு ஸ்பாட் பக்கம் செல்வதில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால்,. உண்மை அதுவல்ல. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் ப்ரண்ட்ஸாகி விட்டார்கள். பழைய பகையை மறந்து, புதிய நண்பர்களாகி விட்டதால், இருவரும் சந்தித்துக்கொள்ளும்போதே, அவர்களது சிரிப்புச்சத்தம்தான் ஜாஸ்தியாக கேட்கிறதாம். ஆக, மறுபடியும் அவர்கள் ராசியாகி விட்டார்கள் என்பதை அது உணர்த்தியுள்ளது.
இந்த நிலையில், வாலு படத்தில், நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகாவே மை டார்லிங் என்று சிம்பு பாடுவது போன்று ஒரு பாடல் உள்ளதாம். அதோடு படத்தின் காதலியும், நிஜ காதலியுமான ஹன்சிகாவின் அழகை எக்கசக்கமாக வர்ணித்து சிம்பு பாடுவது போல் அமைந்துள்ளதாம். ஆக, இந்த பாடல் மூலம் நயன்தாராவுடன் தான் மீண்டும் இணைந்து நடித்தாலும், எனது டார்லிங் இனிமேல் ஹன்சிகா மட்டுமே என்பதையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறாராம் சிம்பு.