அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா. ஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.
கமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார். திடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.
அதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம். அஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.