சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடல் படத்தையடுத்து, எந்த மொழியில் படம் இயக்குவது என்று ரொம்பவே குழம்பிப்போயிருந்தார் மணிரத்னம். அதனால், இந்தியில் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு மலையாளத்தில் பஹத்பாசிலை வைத்து இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது தமிழும் வேண்டாம், இந்தியும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் மணிரத்னம், அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை எடுக்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த படத்தில் நாகார்ஜூனா, மகேஷ்பாபு ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், இந்தியில் இயக்கிய பல படங்கள் தனக்கு தோல்வி முகத்தை காண்பித்ததால், ஒரு மாறுதலுக்காக இப்படி தெலுங்கு பக்கம் சாய்ந்திருக்கும் மணிரத்னம், முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதினாலேயே அவர்களை நாடியுள்ளாராம்.
மேலும், கடல் படத்தில் முதலில் நடிக்கயிருந்த சமந்தாவையும் இப்படத்தில் நடிப்பதற்கு அழைத்துள்ளாராம். அந்த படத்தில் கமிட்டாகி நடித்து வந்தபோது, தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால் வெளியேறிய சமந்தா, மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிராசையாகி விட்டதாக பீல் பண்ணி வந்தவர். இப்போது மறுபடியும் அவர் அழைத்திருப்பதால் உடனே ஓகே சொல்லி விட்டாராம். அதனால், தெலுங்கில் இரண்டு மெகா நடிகர்களோடு, மெகா நாயகி சமந்தாவும் கிடைத்திருப்பதால், இந்த முறை மணிரத்னம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.