ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 3 ஜீனியஸ் (கவுதம், கனி, கிரேஸ்). இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம். அதாவது குழந்தைகள் உடம்பில் ஒரு ஜிப்பை பொருத்திவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்தை வீட்டில் இருந்தே கண்காணிக்கலாம். அவர்கள் கடத்தப்படுவதை தடுக்கலாம். நடைமுறைக்கு வராத இந்த முறை நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்கிற கதையாம். இதில் விஞ்ஞானியாக பாக்யராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது:
நான் இந்தப் படத்தில் நடிக்க போகும்போது ஒரு நடிகனாக போனேன். திரும்பி வரும்போது ஒரு உறவினராக வந்தேன். முழு படத்தையும் மலேசியாவில் எடுத்தார்கள்.
அங்கே போனபிறகு நான் சொந்தக்காரனைப்போல ஆகிவிட்டேன். தயாரிப்பாளர் நடிகர் என்கிற உணர்வே இல்லாமல் தங்கள் குடும்பதில் ஒருவனாக என்னை நினைத்து அன்பும், பாசமும் காட்டினார்கள். வேலை செய்பவர்களும் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் நடந்து கொண்டார்கள்.
நான் மலேசிய நாட்டை பார்த்து மூன்று விதங்களில் பொறமைப்பட்டேன். அங்கு எல்லோரும் ஒன் மலேசியா என்ற தராக மந்திரத்தோடு வாழ்கிறார்கள். இரண்டாவது விஷயம் நள்ளிரவு 3 மணிக்கு போனாலும் கடைகள் திறந்திருக்கும் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒவ்வொரு கடையிலும் பல பேர் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மூன்றாவது விஷயம் மூன்று நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது.
இதை நினைத்து நான் பொறாமைப்படுகிறேன். மலேசியாவில் தயாரிக்கப்படும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், இங்குள்ள படங்கள் மலேசியாவிலும் வெற்றி பெற்றால் இரு நாட்டு உறவும் பலப்படும். இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.