ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கணவருக்காக தொடரில் நடிக்க ஆரம்பித்து இதுவரை 12 சீரியல்களில் நடித்துள்ளார் சுஜிதா. கடைசியா துளசி தொடரில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் இருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் சீரியலுக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை (ஜனவரி 20) முதல் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடிக்கிறார்.
இதில் அவர் மூன்று குழந்தைகளின் தாயாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. வங்கி அதிகாரி பாலுவைத் திருமணம் செய்து கொண்டு நிகிதா, நவ்யா, நவீன் என்ற மூன்று குழந்தைக்கு தாயாகிறார் சுஜி. திடீரென கணவன் கைவிட்டு போய் விடுகிறார். தனி மனுஷியாக நின்று தன் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார் என்பதுதான் சீரியலோட ஒண் லைன்.
சுஜிதாவை பற்றி ஒரு சுவையான தகவல்: முந்தானை முடிச்சு படத்தில் வாத்தியார் பாக்கியராஜின் குழந்தையாக நடித்த குழந்தை நினைவிருக்கிறதா? ஊர்வசி பஞ்சாயத்தில் படுக்க வைத்து தாண்டுவாரே அந்த குழந்தை நினைவிருக்கிறதா?. சரி அதை விடுங்கள். பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜிடம் வந்து சேரும் காது கேளாத பேச முடியாத குழந்தை ஞாபகம் இருக்கிறதா. அந்த குழந்தை இந்த சுஜிதாதான்.