ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து நடித்திருந்த பயர் என்ற இந்திப் படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு வெளிவந்தது. அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால் பாராளுமன்றம் வரை பிரச்னை சென்றது.
இப்போது அதே போன்ற லெஸ்பியன் கதை ஒன்று தமிழில் படமாகி வருகிறது. படத்தின் டைட்டில் உன் பேர் சொல்ல ஆசை. ஷாலினி, சிவகாமி என்ற இரண்டு நியூபேஸ்கள் லெஸ்பியன் கேரக்டரில் நடிக்கிறார்கள். தினேஷ் கேமரா மேனாகவும், சிபு.சுகுமாரன் மியூசிக் டைரக்டராகவும் பணியாற்றுகிறார்கள். மஜீடி என்பவர் டைரக்ட் செய்கிறார்.
சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்து வளரும் இரண்டு பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த நட்பை விடாமல் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் ஒரு ஆண் வந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்களே ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்கிற கதையாம். சென்னை, கோவா, கேரளா பகுதியில் ஷூ நடத்தியிருக்கிறார்கள்.