ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று மற்றும் சூர்யா நடிக்கயிருந்த படம் என இரண்டுமே கிடப்பில் போடப்பட்டதால், சிக்கலில் சிக்கிக்கொண்டிருந்தார் கெளதம்மேனன். ஆனால், அதையடுத்து சரியான நேரத்தில் சிம்பு கைகொடுத்ததால் அதிலிருந்து விடுபட்டு, சிம்பு நடிக்கும் புதிய படத்தில் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
இருப்பினும், மீண்டும் ஒரு புதிய சிக்கல் கெளதம்மேனனை சூழ்ந்துள்ளது. அதாவது, தமிழில் சிம்பு-த்ரிஷாவை ஜோடி சேர்த்து இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பின்னர் இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் ரீமேக் செய்தார் கெளதம். அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஜெயராமன் என்பவர், தங்களிடம் பெரும் தொகையை கெளதம்மேனின் போட்டான் கதாஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கெளதம்மேனனின் நிறுவனத்தில் பணி புரியும் நான்கு பேரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். இதனால் சிம்பு நடிக்கும் படத்தையடுத்து அஜீத்தை இயக்கும் அவசர வேலைகளில் ஈடுபட்டுள்ள கெளதம்மேனன், எதிர்பாராத இன்னொரு சிக்கலையும் இப்போது சந்தித்துள்ளார்.