ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடல் படத்திற்கு பிறகு தனது புதிய படம் பற்றி இன்னும் எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை மணிரத்னம். தொடர்ச்சியாக தான் இயக்கும் படங்கள் சறுக்கிக்கொண்டு வருவதால், அடுத்து ஹீரோயிஸம் கொண்ட படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
சமீபத்தில்தான் மலையாள நடிகர் பகத்பாசிலை வைத்து தமிழ், மலையாளத்தில் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை அவர் இயக்க பேசிக்கொண்டிருப்பதால் இன்னொரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் நடித்த ராவணன் படத்திற்கு முன்பே மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்ட மணிரத்னம், அப்போது அவர் பிசியாக இருந்ததால் அந்த முயற்சியில் கிடப்பில் போட்டவர், இப்போது அதை மீண்டும் தொடங்குகிறாராம். தமிழ், தெலுங்கில் உருவாகும் அப்படத்தில் நடிக்க மகேஷ்பாபுவும் தயாராகி விட்டாராம்.
ஆனால், அவர் ஆக்சன் ஹீரோ என்பதால், தனது ஆக்சன் படங்களான நாயகன், தளபதி போன்று அடுத்து ஒரு அதிரடி ஆக்சன் படத்தை இயக்குகிறாராம் மணிரத்னம். இதே படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கத்தான் மணிரத்னத்தின் ஆஸ்தான ஹீரோவான அரவிந்த்சாமி, ஜிம் சென்று தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.