ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1965-இல் பந்தலு தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தற்போது நவீன ஒளி-ஒலி பதிவுகள் செய்யப்பட்டு, புது மெருகேற்றங்ளுடன் விரைவில் பத்மினி பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. இன்று காலை சென்னையில் இதன் ட்ரைலர் மற்றும் இசை வெளயீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகிகள் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, பந்தலு மகன் மகள் மற்றும் சரத்குமார், சிநேகன், அபிராமிராமநாதன், பி.வாசு, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இசை தட்டை சரத்குமார் வெளியிட, சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜஸ்ரீ ஆகியோர் பெற்றுகொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், இந்த இசை தட்டை தான் வெளியிட்டது பெரும் பாக்கியம் என்றார். மேலும் என்னிடம் யார் சூப்பர் ஸ்டார் ரஜினியா, கமலா என்று கேட்பார்கள். நான் எம்.ஜி.ஆர் என்று சொல்வேன். அடிமைபெண் படத்தை 17 முறை பார்த்தேன், சங்கே முழங்கு படம் பார்க்க காலை சென்றேன், டிக்கெட் கிடைக்கவில்லை, மதியம் கிடைக்கவில்லை, இரவில் பார்த்து விட்டு வீடு சென்றேன், நல்ல அடி வாங்கினேன். அந்தளவுக்கு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரின் நேர்மை, கலர், உடல் அமைப்பு எல்லாரையும் லவ்பண்ண சொல்லும், அவரின் பாடலான உன்னை அறிந்தால் பாட்டை பல இடத்தில் பாடிருக்கேன். அந்த ஒரு வரி போதும், தமிழக மக்கள் இன்றும் என்றும் என்றும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
1965-இல் அந்த அளவு திரை நுணுக்கங்கள் இல்லாத போதே பைரட்ஸ் ஆப் கரிபியன் போல ஒரு படம் பண்ணிருக்கார். இயக்குனரின் போல்ட் அட்டம்ப்ட் தெரிகிறது, அதற்கு எம்.ஜி.ஆர்., எவ்ளோ உழைப்பை போட்டு இருப்பார் என்று நினைக்க வேண்டும். அவரை போல கத்தி சண்டை, சிலம்பம் சுத்த ஆள் இல்லை; எடிட்டிங் உட்பட அவ்ளோ நுணுக்கம்; 1965 இல் புரட்சி தலைவியை பற்றி பாடி இருக்கார்; 'நீ வீராங்கனை, கண் கலங்க கூடாது என்று, தமிழக மக்களுக்கு அவர் கடவுள் போல இருந்துள்ளார், இங்கே பேசும் போது சொன்னார்கள், மலை வாழ் மக்களிடம் சென்று, இப்போது எம்.ஜி.ஆர்., இல்லை என்று சொன்னால் சண்டைக்கு வருவார்கள் என்று, நான் சொல்கிறேன் யாரவது எம்.ஜி.ஆரை பற்றி என்னிடம் தவறாக் பேசினால் அவர்களை பிடித்து அடிப்பேன் என்றார். அழகான முகம், அன்பானவர் இந்த படம் வெளியாகும் அன்று முதல் ஷோ
வரிசையில் டிக்கெட் எடுத்து பார்ப்பேன், முடிந்தால் படத்தின் ஒரு ஏரியாவை எனக்கு தாருங்கள் என்று பேசி முடித்தார்.