சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
விஜயா புரொடக்ஷ்ன்ஸ், நாகிரெட்டி தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் வீரம். இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளான துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் வீரம் ரிலீசாகியுள்ளது. ஆனால் துபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் மட்டும் வீரம் படம் நேற்று 9ம் தேதி ரிலீஸாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் ரிலீசாகாத காரணம் குறித்து தியேட்டர் நிர்வாகம் கூறுகையில், வீரம் படம் தங்களுக்கு வரவில்லை என கூறினர்.
சிங்கப்பூர் ரெக்ஸ் சினமாஸில் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு பணத்தை திரும்பி வழங்கியது தியேட்டர் நிர்வாகம். முன்னதாக படம் ரிலீஸாகதால் ரசிகர்கள் ஏதும் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கலாம் என கருதிய தியேட்டர் நிர்வாகம் போலீஸார் உதவியோடு ரசிகர்களை பணத்தை திருப்பி வழங்கியது.