கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விஜய்யின் 'ஜில்லா' பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளையே(ஜனவரி 10ம் தேதி) ரிலீஸாகிறது. இந்த சமயத்தில் ஜில்லாவின் கதை இதுதான்.... என்றும், இதில் முன்பாதியில் விஜய்யின் அப்பாவாக வரும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பின்பாதியில் விஜய்க்கு வில்லன் என்றும் ஒரு செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. (அப்படி என்றால் தமிழ்சினிமா வரலாற்றில் முதன்முறையாக டைட்டில் கார்டில் ஹீரோவின் பெயருக்கு முன்னால் வில்லனின் பெயரா.?!)
அதாகப்பட்டது, 'ஜில்லா' படத்தின் கதைப்படி அந்த ஏரியாவில் நல்லதும், கெட்டதும் செய்தும் புகழ் வாய்ந்தவராக திகழும் மோகன்லாலுக்கு 2 பிள்ளைகள்! ஒருவர் சொந்தமகன், மற்றொருவர் தத்துமகன். சொந்தமகனான விஜய்யை பாதுகாப்பாக வளர்க்கவே ஒரு தத்து மகனையும் எடுத்து வளர்க்கிறார் மோகன்லால். ஒருகட்டத்தில் தத்து மகன் தான் லாலின் சொந்தமகன், தான், தான் தத்துபிள்ளை என்பதும், தன்னை சொந்தமகன் என்று லால் வளர்ப்பதற்கான காரணமும் விஜய்க்கு தெரியவருகிறது. அதனால் லால்க்கு எதிராகவே திரும்புகிறார் விஜய்! லால் நல்லவரா? கெட்டவரா? வில்லனா.? அவரை விஜய் வென்றாரா? கொன்றாரா..? என்பது க்ளைமாக்ஸ்! இப்படியாக இளையதளபதியின் ஜில்லா கதையை ஜோராய் கிளப்புகிறார்கள் சிலர்! நிஜம் தான் என்ன? கவலையை விடுங்கள்! கதை நாளை இன்நேரம் தெரிந்து விடப்போகிறது...ஹீ...ஹீ...!