ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஜய்யின் 'ஜில்லா' பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளையே(ஜனவரி 10ம் தேதி) ரிலீஸாகிறது. இந்த சமயத்தில் ஜில்லாவின் கதை இதுதான்.... என்றும், இதில் முன்பாதியில் விஜய்யின் அப்பாவாக வரும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பின்பாதியில் விஜய்க்கு வில்லன் என்றும் ஒரு செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. (அப்படி என்றால் தமிழ்சினிமா வரலாற்றில் முதன்முறையாக டைட்டில் கார்டில் ஹீரோவின் பெயருக்கு முன்னால் வில்லனின் பெயரா.?!)
அதாகப்பட்டது, 'ஜில்லா' படத்தின் கதைப்படி அந்த ஏரியாவில் நல்லதும், கெட்டதும் செய்தும் புகழ் வாய்ந்தவராக திகழும் மோகன்லாலுக்கு 2 பிள்ளைகள்! ஒருவர் சொந்தமகன், மற்றொருவர் தத்துமகன். சொந்தமகனான விஜய்யை பாதுகாப்பாக வளர்க்கவே ஒரு தத்து மகனையும் எடுத்து வளர்க்கிறார் மோகன்லால். ஒருகட்டத்தில் தத்து மகன் தான் லாலின் சொந்தமகன், தான், தான் தத்துபிள்ளை என்பதும், தன்னை சொந்தமகன் என்று லால் வளர்ப்பதற்கான காரணமும் விஜய்க்கு தெரியவருகிறது. அதனால் லால்க்கு எதிராகவே திரும்புகிறார் விஜய்! லால் நல்லவரா? கெட்டவரா? வில்லனா.? அவரை விஜய் வென்றாரா? கொன்றாரா..? என்பது க்ளைமாக்ஸ்! இப்படியாக இளையதளபதியின் ஜில்லா கதையை ஜோராய் கிளப்புகிறார்கள் சிலர்! நிஜம் தான் என்ன? கவலையை விடுங்கள்! கதை நாளை இன்நேரம் தெரிந்து விடப்போகிறது...ஹீ...ஹீ...!