ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் தமிழகமெங்கிலும் பரபரப்பாக பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தமிழில் வெளியாகிற அதே நாளில் வீரு டொக்கடே என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆந்திராவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனவரி 10-ந்தேதி ஆந்திராவில் சங்கராந்தி என்பதால் அங்குள்ள பிரபல ஹீரோக்களான மகேஷ்பாபு நடித்த 1, ராம்சரண் நடித்த எவடு ஆகிய படங்கள் வெளியாகிறதாம். அதனால் பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே கைப்பற்றி விட்டார்களாம்.
ஆக, அஜீத் படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கிய சில தெலுங்கு படங்கள் ஹிட்டாகியிருப்பதோடு, தமன்னா வீரம் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், தெலுங்கிலும் அஜீத்தின் கொடி பறக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், அங்குள்ள ஹீரோக்களுடன் போட்டிக்கோதாவில் இறங்கினால், கிடைக்கிற வசூலும் இல்லாமல் போய் விடும் என்பதால் புத்திசாலித்தனமாக ரிலீஸ் தேதியை பின்தள்ளி வைத்திருக்கிறார்களாம்.