Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆளுமை மிகுந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி புகழாரம்!!

06 ஜன, 2014 - 14:54 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார், சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, என்றென்றும் ரவிக்குமார் என்ற விழா, ராஜ் டி.வி. சார்பில் எடுக்கப்பட்டது. பல வெற்றி படங்களை கொடுத்த இவரது பாராட்டு விழாவில் கமல், சரத்குமார், சங்கீதா, ஆர்.பி.செளத்ரி, விக்ரமன், கேயார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய ரஜினி, நாட்டாமை படத்தை பார்த்து, குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ரவிக்குமாரை பார்த்து நானும் படம் பண்ண ஆசைப்பட்டு அவரிடம் கேட்டேன். அதின்படி முத்து படம் பண்ணியதாவும், படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கிலேயே அவரது கடன உழைப்பை பார்த்து, முத்துராமன் சாரிடம் 25 படங்கள் பண்ணியது போன்று ரவிக்குமாரிடம் 10 படங்களாவது பணியாற்ற எண்ணினேன். ஆனால் முத்து, படையப்பா என்ற படங்களில் தான் நடிக்க முடிந்தது.

எல்லாம் தெரிந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆளுமை மிகுந்தவராக இருப்பார். நான் அவரை மேஸ்திரி என்று தான் அழைப்பேன். இயக்குநர்களில் கோடீஸ்வரர் அவர் தான். நிறைய பேருக்கு அவர் உதவி செய்துள்ளார். ஆனால் அது யாருக்கும் தெரியாது. சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, டாக்டர்கள், என்ஜினியர்கள், தொழிலதிபர்கள் என்று பலரிடமும் அவருக்கு நட்பு வட்டாரம் உண்டு. எனது படங்களை பற்றி முதலில் அவரிடம் தான் ஆலோசனை செய்வேன்.

ஜக்குபாய் நடிக்க முடியாமல் போனது, ராணா தொடங்கும் போது உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரது படங்களில் நடித்தால் தான் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். ராணா படம் தள்ளிப்போனது வருத்தமாக உள்ளது. கோச்சடையானில் என் மகளுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பை, நான் கூட என் மகளுக்கு கொடுக்கவில்லை. நல்ல மனசும், திறமையும் உள்ள ரவிக்குமார், இன்னும் பல வெற்றி படங்களை தர என்னுடைய வாழ்த்துக்கள் என்று பேசினார் ரஜினி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in