ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கரு.பழனியப்பன் இயக்கத்தில், விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை மோகன்தாஸ், அதன்பிறகு குரு நம்ம ஆளு உள்பட சில படங்களில் நடித்தவர் தமிழில் போதுமான படங்கள் இல்லாததால் மலையாளத்தில் அதிக படங்களை கைப்பற்றி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார். அப்படி அவர், அன்வர் என்ற மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் புற்று நோய் தன்னை தாக்கியிருப்பதை உணர்ந்தார் மம்தா.
அதையடுத்து அப்படத்தை முடித்துக்கொடுத்து விட்டு சிகிச்சைக்கு சென்றவர், மறுபடியும் சில படங்களில் நடித்தார். ஆனால், மீண்டும் தனது உடம்பில் நோயின் தாக்கம் இருப்பதற்கான அறிகுறி தெரியவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறுபடியும் புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்க சென்ற மம்தா இப்போது பூரணமாக குணமாகி விட்டாராம்.
அதனால், மீண்டும் மலையாள படங்களில நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கிருஷ் சத்தார் என்ற நடிகருக்கு ஜோடியாக டு நோரா வித் லவ் என்ற படத்தில் புதிதாக கமிட்டாகியிருக்கிறார். புற்றுநோயை எதிர்த்து துணிச்சலாக போராடும் நான், போராட்ட குணம் கொண்ட அதிரடியான வேடங்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சில மலையாள டைரக்டர்களிடம் கூறி வருகிறாராம்.
மேலும், டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற துள்ளலான பாடலை பாடிய மம்தா மோகன்தாசுக்கு, பாடுவதிலும் அதிக ஆர்வம் இருப்பதால், தனக்கு பாடுவதற்கும் தொடர்ந்து சான்ஸ் தருமாறும் சில இசையமைப்பாளர்களிடம் அதே பழைய ஆர்வத்துடன் கேட்டு வருகிறாராம்.