ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இவன் வேற மாதிரி படத்தைப் பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தை ரஜினி சொன்னால் படத்துக்கு ப்ளாசாக இருக்குமே என்று அவரை படம் பார்க்க வைத்து அவர் சொன்ன கருத்தையும் வெளியிட்டார்கள். ஆனால், ப்ரோட்டா சூரி பெயரில் கணக்கு துவங்கப்பட்டிருக்கும் ஒரு பேஸ்புக்கில் ரஜினியின் கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று வெளியானது. அதில், இவரு சொல்லிட்டால கூட்டம் தியேட்டருக்கு வந்துடுமா? என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி வெளியானதுபோது கோலிவுட்டே பற்றிக்கொண்டது. ரஜினி கருத்துக்கு எதிராக பரோட்டா சூரி கருத்து சொல்லியிருக்கிறார் என்று ஆளாலுக்கு அவரை நோண்டத் தொடங்கி விட்டனர். இதனால் ஆடிப்போனார் சூரி. எனக்கு, பேஸ்புக்கும் தெரியாது, டுவிட்டரும் தெரியாது. நானெல்லாம் அந்த அளவுக்கு படிக்கலீங்க. என்னைய வம்புல மாட்டி விடாதீங்கள் என்று கெஞ்சினார்.
அதோடு நில்லாமல், விட்டால் தொடர்ந்து தன்னை டென்சன் செய்து கொண்டேயிருப்பார்கள். என்று நேற்று கமிஷனர் அலுவலகம் சென்று, தன் பெயரில் 3 பேஸ்புக் கணக்குகளை துவங்கி யாரோ விஷமிகள் நடத்தி வருவதாக சொன்ன சூரி, என் பெயரில் உள்ள அந்த பேஸ்புக் கணக்குகளை முடக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சூரியின் புகாரை ஏற்றுக்கொண்டவர்கள், ஆவண செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்களாம். அதன்பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டபடி வெளியேறியிருக்கிறார் பரோட்டா சூரி.