ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலுமகேந்திரா இயக்கி உள்ள தலைமுறைகள் படத்தை பார்த்த கமலஹாசன். அதுபற்றிய தனது கருத்தை வீடியோ அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாலுமகேந்திராவின் துணிவு தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு புதிதல்ல. இந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை அதே தைரியத்துடன் வைத்திருப்பற்கு என் வணக்கம். அவர் கேமரா திறமை பற்றி யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப்போல எந்த கேமராவைக் கொடுத்தாலும் அதை வல்லமையோடு கையாளும் திறன் கொண்டவர். கருவி முக்கியமல்ல, கலைஞன்தான் முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறார். அவர் டைரக்ஷனில் நடிக்கும்போது எங்களுக்கு நடிப்புச் சொல்லித் தருவார். அவர் நடிப்பு எனக்கு புதிதல்ல இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு இன்னொரு அனுபவமாக இருந்தது.
இளையராஜாவின் இசை கிராமத்தின் இசை. இயற்கை இசைக்கு வழிவிட்டு இடையிடையே இசை அமைத்திருக்கிறார். எங்கு இசை அமைக்கவேண்டும் எங்கு சைலண்ட் பண்ண வேண்டும் என்பதை அறிந்த இசை அமைப்பாளர்கள் உலகிலேயே ஒருசிலர்தான். அவர்களில் ஒருவர் நம் தமிழ் நாட்டில் இருப்பது நமக்குப் பெருமை.
இந்த படம் அந்த படம் மாதிரி கலெக்ஷனை கொடுக்குமா என்று ஆராயத் தேவையில்லை. காரணம் இது அதற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. பாலுமகேந்திரா வைராக்கியத்துடன் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ள சினிமா. அடுத்த கட்டத்துக்கு பாயும் மனோபாவம் அவருக்கு எப்போதும் உண்டு. அதற்கு நாம் தோள் கொடுப்போம்.
பாலுமகேந்திரா மீது கெண்ட பாசத்தால் மட்டுமல்ல தமிழ் சினிமா மீது கொண்ட நேசத்தால் சசிகுமார் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் அவரது துணிச்சலுக்கும் நன்றி.
இவ்வாறு கமல் அந்த வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார்.