பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல சேனல் ஒன்றில் ஞாயிறு அன்று மட்டும் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரை டைரக்ட் செய்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இன்னொரு புதிய சேனலுக்கு நிகழ்ச்சி தயாரித்ததால் மகாபாரத தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மகாபாரதம் தொடரை ஆரம்பிக்கும்போதே அதன் கடைசி வரை செல்வோம் என்று எனக்கு தோன்றவில்லை. காரணம் ஒரே புராஜக்டில் என்னால் வருஷக் கணக்கில் லாக் ஆகியிருக்க முடியாது. அதனால் ஆரம்ப கட்ட பணிகளை செய்து கொடுத்துவிட்டு விலகிக் கொள்கிறேன் என்று சொல்லித்தான் அந்த தொடரில் கமிட் ஆனேன். அதற்கான நேரம் வந்தபோது விலகிக் கொண்டேன். மகாபாரதத்தை ஆரம்பிக்கும்போது சந்தோஷம் இருந்ததைப்போல விலகும்போது வருத்தமும் இருந்தது.
இப்போது உணர்வுகள் தொடரை சந்தோஷத்துடன் இயக்கி வருகிறேன். நானே தயாரிப்பாளராவும் இருக்குறதால சுதந்திரமா வேலை செய்ய முடியுது. அதோடு புது சேனல்ல நல்ல மரியாதை தர்றாங்க. அவுங்களோட அப்ரோச் பிடிச்சிருக்கு.
இது ஒரு பக்கம் இருந்தாலும் விரையில் ஒரு தெலுங்கு படத்தையும், ஒரு தமிழ் படத்தையும் டைரக்ட் பண்ணப்போறேன். ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. புதுமுகங்கள் நடிக்கிறாங்க என்றார்.