ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில்தான் தனுஷ் 5ம் வகுப்பு என்ற பெயரில் ஒரு படத்தின் ஆடியோ விழா நடந்தது. அந்த விழாவின்போது, தப்பித்தவறிகூட யாரும தனுஷைப்பற்றி பேசி விடாதீர்கள் என்று படக்குழுவினர் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களை கேட்டுக்கொண்டனர். காரணம், இந்த டைட்டில் வைத்ததற்கே கோபத்தில் இருக்கும் தனுஷ், இந்த நிலையில், அவரைப்ப்றறி ஏதாவது பேசப்போக மீண்டும் கொதித்து விடக்கூடாதே என்பதில் ஏற்பட்ட அச்சம்தான் காரணமாம்.
அதையடுத்து, இப்போது சரவணன் என்கிற சூர்யா என்ற பெயரிலும் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, இந்த டைட்டிலை மாற்றுமாறு சூர்யா மிரட்டியதாக கூறினார் பட டைரக்டர் எஸ்.எம்.ராஜா. மேலும், இவர் தம்பி கார்த்தி மட்டும் நான் மகான் அல்ல, அலெக்ஸ் பாண்டியன் என்ற ரஜினி டைட்டில்களை பயன்படுத்தி மாசுபடுத்தலாம். ஆனால், இன்னொருத்தர் இவர்கள் பெயரில் படம் எடுக்கக்கூடாதா? என்று பொங்கினார்.
மேலும், இதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நான் டைட்டிலை மாற்றுவதாக இல்லை. அவர் சம்பந்தப்பட்ட விசயங்களை கதை பண்ணியிருந்தால்தானே நான் பயப்பட வேண்டும். அப்படி இல்லாதபோது எதற்காக பயப்பட வேண்டும் என்று சொன்ன அவர், வேண்டுமானால் படத்தை சூர்யாவுக்கு போட்டுக்காட்டகூட நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.