ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அங்காடித்தெருவுக்கு பிறகு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரையுடன் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்த பிறகு மேலும் சில படங்களில் கமிட்டாகயிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதாக அவரது சித்திக்கும், அவருக்குமிடையே சொத்து பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. தன்னை மோசடி செய்வதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார் அஞ்சலி.
அதன்காரணமாக, தமிழில் அவருக்கு கிடைக்கயிருந்த பல படங்கள் மாற்று நடிகைகளுக்கு சென்று விட்டன. குறிப்பாக, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடிக்க அஞ்சலியிடம் பேசியிருந்தனர். அவர் திடீரென ஒரு நாள் மாயமாகி விட்டதால், இவர் சரிப்பட்டு வரமாட்டார். பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இப்படி தலைமறைவாகி விட்டால், நம் கதி அதோகதியாகி விடுமே என்று மனீஷாவை புக் பண்ணி படமாக்கினார் சுசீந்திரன்.
அதேபோல், முனி-3 கங்கா படத்தை இயக்கி வரும் லாரன்சும் முதலில் அஞ்சலியை புக் பண்ணி வைத்திருந்தார், ஆனால், அடிக்கடி அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கும் அவர், அங்கு யாரையோ ரகசிய திருமணம் செய்து வைத்திருப்பதாக செய்திகள் புகைந்து கொண்டிருப்பதால், கடைசி நேரத்தில் அஞ்சலியை ஓரங்கட்டிவிட்டு நித்யாமேனனை புக் பண்ணி விடடார்.
இப்படி வெளியில் தெரிந்து 2 படங்களை இழந்துள்ள அஞ்சலி, வெளியில் தெரியாமலும் பல படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளாராம்.