ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், அவரால் மலேசியாவில் இன்று நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஆனாலும் அவர் சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலேசியாவில் உள்ள ரசிகர்களிடம் பேச இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, இன்று(28ம் தேதி) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் கார்த்திக்ராஜா, யுவன்ஷங்கர் ராஜா, வெங்கட்பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தாருடன் எஸ்.பி.பி., சித்ரா, ஹரிச்சரண் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்களும் மலேசியா சென்றுள்ளனர். இளையராஜாவும் மலேசியா செல்ல இருந்தார். ஆனால் சின தினங்களுக்கு முன்னர் பிரசாத் ஸ்டுடியோவில் விழாவிற்கான ரிகர்சலில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளையராஜாவிற்கு ஆஞ்சியோகிராம் சோதனை அளிக்கப்பட்டது. ஒரே ஒரு இடத்தில் அடைப்பு இருந்ததை கண்டு பிடித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளித்து அந்த அடைப்பை சரி செய்தனர். இதனையடுத்து அவர் நலமானார். இருந்தாலும் டாக்டர்கள் அவரை விமானங்களில் பயணம் செய்வதை எல்லாம் சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் அவர் மலேசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இளையராஜா பங்கேற்காததால் மலேசிய ரசிகர்கள் சோகம் அடைந்தனர். ஆனபோதும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக சென்னையில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மலேசியாவில் உள்ள ரசிகர்களிடம் பேச இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் மெர்டிகா மைதானத்தில் இளையராஜாவின் பேச்சை நேரடி ஒளிப்பரப்பு செய்ய அகன்ற திரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.