மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியைப்பற்றி சொன்னவர், மிருகம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அப்பட நாயகி பத்மப்பிரியாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அவர் தொடர்ந்து படம் இயக்க தடை செய்யப்படும் விதமாக ரெட் கார்டு போடப்பட்டது.
பின்னர் அதிலிருந்து விடுபட்டு, சிந்து சமவெளி படத்தை இயக்கினார். அதில் மாமனார்-மருமகள் செக்ஸ் லீலைகளை படமாக்கியிருந்தார். இதனால் மகளிர் அமைப்புகள் சாமிக்கு எதிராக போர்க்கொடி பிடித்தன. இப்படியாக தான் இயக்கிய மூன்று படங்களிலுமே மூன்று விதமான சர்ச்சைகளை சந்தித்த சாமி, சில வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது இயக்கியுள்ள படம்தான் கங்காரு.
இந்த படத்தில் தனது பழைய சர்ச்சைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதையை படமாக்கியுள்ளாராம். முந்தைய படங்களின் கதைகள் ஆபாசமான விசயங்கள் என்றாலும், தான் சொல்ல நினைத்ததை தைரியமாக சொன்ன சாமி, இந்த படத்தில் பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம்.
சிவாஜி-சாவித்ரி நடித்த பாசமலர், விஜயகுமார்-ராதிகா நடித்த கிழக்கு சீமையிலே படங்களுக்கு இணையாக இப்படத்தில் அண்ணன்-தங்கையின் பாசத்தை சொல்லியிருக்கிறாராம் சாமி. அதனால் இதுவரை என்னை தூற்றிய தமிழ்நாட்டு மக்கள், இந்த படத்தைப்பார்த்து விட்டு தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்போகிறார்கள் என்றும் நம்பிக்கையுடன சொல்கிறார் அவர்.