ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போது கோடம்பாக்கத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பூஜை போடுவதற்கு முன்பே சேனல் ரைட்ஸ் விலைபோய் விடுகிறது. அதனால் சேனல்களிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டே படப்பிடிப்பை ஆரம்பித்து விடுகிறார்கள். குறிப்பாக, சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம்கூட ஒரு சேனலுக்கு விற்பனையாகி விட்டது. அதனால், அவர்கள் கொடுக்கும் தொகையை வைத்தே படத்தை முடித்துவிடப்போகிறார்களாம்.
இதேபோல், இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படமும் இப்போதே விலை பேசப்பட்டு விட்டது. அப்படத்தை தயாரிக்கயிருக்கும் ஏ.எம்.ரத்னம் ஒரு சேனலிடம் 20 கோடி தந்தால் என் படத்தை உங்களுக்கே சேனல் ரைட்ஸ் தருகிறேன் என்று ஒரு பேச்சுக்காகத்தான் சொன்னாராம். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 20 கோடிக்கே வாங்கிக்கொள்வதாக அந்த சேனல் முன்வந்துள்ளதாம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள ஏ.எம்.ரத்னம், இதற்கு முன்பு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்ததை விடவும், அடுத்து தயாரிக்கும் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்போகிறாராம். சேனல் ரைட்ஸே 20 கோடிக்கு போகும்போது, ஏரியா வாரியாக படம் பெரிய அளவில் வியாபாரமாகும் என்பதை இப்போதே கணித்து விட்ட அவர், முழுப்படத்தையும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்போகிறாராம்.