ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவையில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழாவில் டைரக்டர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது: எழுத்தாளர்களை அவர்களது தரமான எழுத்துக்களே அடையாளம் காட்டுகிறது. நான் எழுத்தாளர்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்களே எனது சினிமாக்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள். இருட்டின்ட ஆத்மா என்ற மலையாள சிறுகதையின் தாக்கம்தான் சேது படமாக உருமாறியது. பிதாமகன் உருவானதும் ஒரு சிறுகதையின் தாக்கத்தினால்தான். ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலின் ஒரு பகுதிதான் நான் கடவுள் படமானது. பரதேசி படத்தில் வரும் ஒட்டுப்பொறுக்கி கேரக்டர் நாஞ்சில் நாடன் எழுதிய தெய்வங்கள், ஓநாய்கள் நாவலில் இருந்தே எடுக்கப்பட்டது. எனது அடுத்த படத்தின் கதையை ஜெயமோன்தான் எழுதுகிறார்.
எல்லா எழுத்தாளர்களும் என் உயிரில், படைப்பில் பாதியாக இருந்திருக்கிறார்கள். எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் சினிமாவுக்கு வந்தால் அது உருப்படும் என்பது எனது நம்பிக்கை.
இவ்வாறு பாலா பேசினார்.