ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “ஆசாமி” படத்தின் இயக்குநர் ஆண்டள் ரமேஷ் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் “இன்னாருக்கு இன்னாரென்று”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் கூறுகையில்... இன்னாருக்கு இன்னரென்று படத்தில் வித்தியாசமான் கதையுடன் காதலை நாகரிகமாக சொல்லியிருக்கிறேன். ஒரு நாயகர். இரு நாயகி.. என கதா நாயகியர் முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நாயகரை காதலித்த பெண் விதவையாக., அடுத்து காதலிக்கும் பெண் விட்டுகொடுக்க., யாரை மணப்பது? என்பதில் ஹீரோ குழம்புவதும், க்ளைமாக்ஸில் ஹீரோவின் குழப்பத்திற்கு விடை காண்பதும் தான் “இன்னாருக்கு இன்னாரென்று” மொத்தபடமும்.
முற்போக்கு சிந்தனையுடனும் இளைஞர்களின் எதிர் கால வாழ்கை கேள்விகுறியாகி விடக்கூடாது எனும் நல்லெண்ணத்துடனும் போதை பழக்கத்தை இளைஞர்கள் முற்றிலும் துறக்கும் விதமாக ஒரு பாடலை எழுதி நான் நடிக்கவும் செய்துள்ளேன். “கேட்டுக்க நண்பா கேட்டுக்க..” எனும் பல்லவியுடன் தொடங்கித்தொடரும் அப்பாடலில், “இந்த போதை நீ வந்தபாதை... நம்ம நாட்டையும் வீட்டையும் அழிச்சுடுமே... பல மேதை சொன்ன கீதை... நீயும் படிச்சா மயக்கம் தெளிஞ்சுடுமே...” என்று இடம்பெறும் வரிகள் எப்பேற்பட்ட குடிகாரர்களின் மனதையும் கரைத்து குடியை நிறுத்த உதவும்.
கண்ணதாசன் வரிகளில் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்து 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் இடம் பெற்ற “கடவுள் அமைத்து வைத்த மேடை..' எனத்தொடங்கித் தொடரும் பாடலில் வரும் “இன்னாருக்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று” எனும் வரிகளில் முதல் இரண்டு வார்த்தைகளையே டைட்டிலாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் இந்த “இன்னாருக்கு இன்னாரென்று”.
பெண்களுக்கிடையே உள்ள கலாச்சாரம் மாறாத கண்ணியமான காதலை மையமாக வைத்து குடும்ப பின்னனியில் திரைக்கதை அமத்துள்ளேன். பெண்களிடமும், பெரியோர்களிடமும் பெரும் வரவேற்பை பெற இருக்கும் அந்த போதைக்கு எதிரான பாடலும், இப்படமும் வெளியான பிறகு தமிழகத்தில் போதைக்கு எதிரான ஒரு மறுமலர்ச்சியே ஏற்படும் எனும் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ்., இப்படத்தில் சந்தானபாரதி, விஜயகிருஷ்ணராஜ், அனுமோகன், ஆர்.என்.ஆர். மனோகர் உள்ளிட்ட நான்கு சீனியர் இயக்குநர்களை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி இருப்பதோடு ஐந்தாவது இயக்குநராக தானும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறுகிறர். மேலும் அவர் கூறுகையில்... கதாநாயகியின் தந்தை சந்தான பாரதி மூலம் இப்படத்தில் காதல் என்ற பெயரில் பாதை மாறும் பெண்களுக்கும் வசதியான வீட்டு பெண்களுக்கு குறிவைக்கும் கயவர்களுக்கும் பாடம் புகட்டியிருப்பதாகவும் கூறுகிறார்.
அஞ்சனா, ஸ்டெபி என இரண்டு கதாநாயகிகளும் போட்டி போட்டு நடித்து இப்படத்தின் உயிரோட்டமான கருவுக்கும், கதைக்கும் மேலும் மெருகு சேர்த்திருக்கின்றனர். இவர்களுடன் அறிமுக நாயகன் சிலம்பரசன் நடிக்கும் “இன்னாருக்கு இன்னாரென்று” திரைப்படத்தை 'ஏழுமலையான் மூவீஸ்', 'நாயகன் சினி ஆர்ட்ஸ்' நிறுவனங்கள் சார்பில் எஸ். நாயகம் தயாரிக்கிறார். இசை - வசந்தமணி, ஒளிப்பதிவு - சாய் நட்ராஜ், படத்தொகுப்பு - S.R.முத்துகுமரன், பாடல்கள் - பிறைசூடன், இளையகம்பன், ஆண்டாள் ரமேஷ்! ஜனவரியில் திரைக்கு வர இருக்கிறது “இன்னாருக்கு இன்னாரென்று”