ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஸ்வரூபம் போல், ஹாலிவுட் தரத்தில் படங்களை இயக்கி வளர்ந்து விட்டபோதும், தன்னை வளர்த்து விட்ட ஏணிகளை மறக்காதவர் கமல். தன் ஆரம்பகால வளர்ச்சிக்கு வேர்களாக இருந்தவர்களை, இப்போதும் நன்றியோடு எண்ணிப் பார்ப்பதோடு, அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்கிறார். உதாரணத்திற்கு, தான் கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில், தன்னை வைத்து, உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா போன்ற படங்களை இயக்கிய ஆர்.சி.சக்தியுடன், இப்போது வரை, பழைய நட்பை தொடர்ந்து வருகிறார் கமல்.வன்முறைக்கு எதிரான கருத்தினை மையமாக வைத்து, ரோஜாக்கள் ஐந்து என்றொரு குறும்படத்தை, தற்போது இயக்குகிறார். ஆர்.சி.சக்தி. இதில், அவரது ஐந்து பேரன்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு, கமலை ஒரு பாடல் பாடி தருமாறு கேட்டுக் கொண்டாராம். அதையடுத்து, பாடலின் சூழலைக் கேட்ட கமல், அதற்கான பாடலையும் தானே எழுதி, பின்னணியும் பாடிக் கொடுத்து, நட்புக்கு பெருமை சேர்த்துள்ளாராம்.