14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஜெயம்ரவி, த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கும் பூலோகம் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடியால் படம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. பூலோகத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஜெயம்ரவியின் நிமிர்ந்து நில் படம் முடிந்து விட்டது. பூலோகத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் டைரக்ட் செய்து வருகிறார்.
பூலோகம் வடசென்னை பகுதியில் சூதாட்டம் போன்று நடக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்போது அதே கதை களத்தை மையமாக கொண்டு நாங்களும் ஏடாகூடம் என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். மனோஜ், பார்வதி சுரேஷ் என்ற நியூபேஸ்கள் நடிக்க ஆர்.விஜயகுமார் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். படத்தை பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்.
"குத்துச் சண்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு விளையாட்டு. ஆனால் வடசென்னையில் அது தாதாக்களை உருவாக்கும் வித்தையாக கருதப்படுகிறது. குத்துச் சண்டையில் சேம்பியன் ஆகிறவன்தான் பெரிய தாதா. அவனுக்கு எல்லோரும் பயப்பட வேண்டும். அவனை இன்னொருவன் வென்று விட்டால் அன்றுமுதல் அவன்தான் தாதா. படத்தின் ஹீரோவுக்கும் குத்துச் சண்டையில் பெரிய ஆளாகி தாதாவாக வேண்டும் என்கிற ஆசை. இதற்காக ஒரு குருவிடம் பயிற்சி பெறுகிறார். அந்த குரு ரொம்ப நல்லவர். ஹீரோவுக்கு குத்துச் சண்டை கற்றுக் கொடுத்த அது ஒரு நல்ல கலை என்பதை நிரூபிக்கிறார். இதுதான் படத்தோட கதை" என்றாகிறார் இயக்குனர்.